இயல்புடைய மூவர்
மின் தமிழ்க் குழுமத்தின் மூலம் கிடைத்த நண்பர்களுள் திருவாளர். தேவ் என்ற தேவராசனும் ஒருவர். இவர் பன்மொழி அறிவாளர். இவரின் வடமொழி ஆற்றல் குறிப்பிடத்தக்கது. திருக்குறள் பற்றி அறியக் கருத்துக்களை அவ்வப்பொழுது எழுதுவார். இவர், என்னுடைய மற்றொரு நண்பரான Dr.நாக.கணேசன் (US, NASA)அவர்களிடம், திருக்குறள் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வரும், கீழ்க் கண்ட குறளைக் குறிப்பிட்டு இதற்கு சமண சார்ந்த விளக்கம் கூறுமாறு கேட்டிருந்தார். அக்கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருந்தாலும், அக்கேள்விக்கான பதிலை யான் குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்பதால், இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம்!
அக்குறள் இதுதான்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – திருக்குறள் – 41
தேவ் ஐயா அவர்களுக்கு மட்டுமல்ல பரி உரையைப் படித்தவர்கள் யாருக்கும் கேட்கத் தோன்றும் கேள்விதான் அது. பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்த்துவிட்டு, பின் என் கருத்தை முன் வைக்கிறேன்.
பரிமேலழகர் உரை:
”இல்வாழ்வான் என்பான் – இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான், இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை – அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் சொல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணை ஆம்.
‘இல்’ என்பது ஆகுபெயர். ‘என்பான்’ எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்: ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங் காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிப்படத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ் ஒழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச் செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந் நெறிகளின் வழுவாமல் செலுத்தலான், ‘நல் ஆற்றின் நின்ற துணை’ என்றார்.”
நான்கு ஆசிரமங்கள்
வேத தர்மம் நான்கு ஆசிரமங்களை போற்றுகிறது.
1. பிரம்மசரியம் – கல்யாணம் செய்யாமலே வாழும் முறை
2. கிருஹஸ்தம் - இல்லறத்தார்
3. வானப்பிரஸ்தம் – காட்டில் வாழும் இல்லறத்தார்
4. சன்யாசம் – துறவறத்தார்
ஆனால், சமண தர்மம் இரண்டே இரண்டு ஆசிரமங்களைத் தான் போற்றுகிறது. ஒன்று இல்லறம் மற்றொன்று துறவறம். குறள், நாலடியார்ப் பகுப்பும் இதுவேயாம். இது நிற்க!!
இயல்புடைய மூவர் என்பதற்கு பரிமேலழகர் பிரம்மசரியம் மேற்கொண்டு ஒழுகுபவர், வானப்பிரஸ்தம் ஏற்றுக் காட்டில் வாழும் தம்பதியர் மற்றும் யாவற்றையும் துறந்தவர்களான துறவறத்தார் என்றுப் பொருள் கொள்கிறார். இவ்வாறுப் பொருள் கொள்வது பொருந்தாது! எவ்வாறெனின்?
பிரம்மசரியம் ஏற்றவர்கள், சன்யாசம் மேற்றவர்கள் இல்லறத்தார்களை அண்டி வாழவேண்டும். இது இயல்பு. ஆனால், தம்பதி சகிதமாக, நாட்டை விட்டு வெளியேறி, காட்டில் வாழும் வானப்பிரஸ்தார் (காட்டு இல்லறத்தார் என்றுச் சொல்லலாமா??), நாட்டில் வாழும் இல்லறத்தார்களை அண்டி பிழைக்கவேண்டிய அவசியமில்லை. ஏன்னென்றால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களே காட்டில் பெற்று வாழ்வார்கள். அவர்களை இல்லறத்தார் போற்றவேண்டிய அவசியமே இல்லை.
அவ்வாறு இருக்கும்போது, இயல்புடைய மூவரில் இருவரே (பிரம்மசரியம், சன்யாசம்) பொருத்தமாகயிருக்கிறது. பரி உரைக் கூறும் மூன்றாவது இயல்புடையவரான வானப்பிரஸ்த்தாருக்கு- காட்டு இல்லறத்தானுக்கு ‘இல்வாழ்வான் துணை’ எவ்வகையில் துணையாகயிருப்பான். சொல்லுங்கள்?
அப்படியென்றால், குறள் கூறும் அம்மூவர் யாவர் அவர்கள் எத்தகையவர்கள் என்றால்?
சமணம் வாழ்த்தும் ஐங்குரவர்கள்:
1. அரஹந்தர் (அருகர்)
2. சித்தர்
3. ஆச்சாரியார்
4. உபாத்தியாயர்
5. சாது அல்லது முனிவர்
அவர்களில், சித்தர், அருகர் பரிநிர்வாணம் (வீடுபேறு) அடைந்தவர்கள். மற்ற மூவர்களான ஆச்சாரியர்கள், உபாதியாயர்கள், சாதுக்கள் (முனிவர்கள்) தற்போதும் இல்லறத்தார்களிடையே வாழ்பவர்கள். இல்லறத்தார் ஆதரவின்றி அவர்கள் தத்தம் கடமைகளை ஆற்ற முடியாது. அவர்களின் உணவு போன்ற தேவைகளுக்கு இல்லறத்தார்களை அண்டியே வாழவேண்டியிருக்கிறது.
இதனை அறநெறிச்சாரம் என்ற தமிழ்ச் சமண நூல்,
“நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி – யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்து அறம்” – பாடல் – 15
என்று துறவறத்தாரை இல்லறத்தார் போற்றவேண்டும் என்றும், இல்லறத்தாருக்குத் துறவறத்தார் துணைப் புரியவேண்டும் என்று வலியுறுத்தி பேசுவதைக் காணலாம்.
இதனால், அக்குறளில் கூறப்பட்ட மூவர்களுக்கும் (ஆச்சாரியர், உபாத்தியர், முனிவர் – துறந்தவர்கள்). இல்லறத்தார் துணையாகயிருக்கவேண்டும் என்று அக்குறள் கூறுகிறது.
இல்லறத்தார் துறவறத்தாரைத் தான் போற்றவேண்டுமா? என்ற கேள்விக்கு, அடுத்தக் குறளிலேயே பதில் கொடுத்திருக்கிறார் தேவர் பெருமான்.
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை" – குறள் – 42
உரை: துறந்தவர்களுக்கும், வறுமைப்பட்டோர்களுக்கும், ஒருவரும் இன்றி அனாதைகளுக்கும் இல்வாழ்வான் துணை. (இங்கு இறந்தார் என்பது இரந்தார் என்றிருக்கவேண்டும். ஏட்டு பிழையால் மாறியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து)
இல்லறத்தார் – வனப்பிரஸ்தர்
வேதம் போற்றும் நான்கு ஆசிரமங்களைப் பார்த்தோம் இல்லையா. அவர்களில் வனப்பிரஸ்தர்ப் பற்றி சிறிதுத் தெரிந்துக் கொள்வோம். வனப்பிரஸ்தர் என்போர் காட்டில் வாழும் முனிவரும் அவருடைய பத்தினியுமாம். அஃதாவது, தம்பதி சகிதமாக காட்டில் வாழும் முனிவர்கள்.
நாட்டில் வாழும் இல்லறத்தாருக்கும் காட்டில் வாழும் இந்த வனப்பிரஸ்தார் பொருளளவில் வித்தியாசம் கிடையாது. உருவ அளவில் மட்டுமே வித்தியாசம் சொல்லாம்.
இவ்வகையான துறவைத் திருக்குறள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்ஙனமெனில்,
”தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்” – திருக்குறள் – பாடல் – 348
என்றும்,
உற்றாருக்கும் உடம்பும் மிகை (குறள் - 345) என்று சொல்லும் போது, இல்லாளைக் கூடவைத்துக் கொண்டு எங்ஙனம் துறவறம் மேற்கொள்வது? சிரிப்பாகயில்லை!!
இதனால் தீர துறக்காமல், தன் பத்தினியுடன் காட்டில் சமைத்து உண்டு வாழ்வோரை (வனப்பிரஸ்தர்) எப்படி துறவறத்தில் சேர்க்க முடியும். அவர்களும் இல்லறம் மேற்கோண்டோரே என்பதையும் நினைவில் நிறுத்தி,துணிக!!
இதனை அறநெறிச்சாரம் அழகாகக் காட்டும்.
“அட்டூண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டூண்ணா மாட்சி உடையவர் – அட்டூண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை" – பாடல் – 166
இதன் கருத்து:
சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு விருந்தினர் எக்காலத்திலும் சமைத்து உண்ணாத பெருமையுடைய துறவறத்தார்களே ஆவர் என்று கூறுவதைக் காண்க.
(அக்குறளைப் புரிந்துக் கொள்ள இப்பாட்டு பெரிதும் உதவும். இப்பாட்டை தனியாகப் பதிவிட்டு விரிவாக விளக்குவன்)
மேலும் குறளில் எங்கேயும் நான்கு ஆசிரமங்களைக் குறிக்கவில்லை, மாறாக சமணம் போற்றும் இரண்டு ஆசிரமங்களை வெளிப்படையாகப் போற்றுகிறது. இப்பகுப்பிற்கு நாலடியாரே மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
யான் திரும்ப, திரும்பச் சொல்வது யாது என்றால் குறள்ச் சமயம் காண இதுபோன்ற குறள்களை வைத்துத் தேடாதீர்கள். குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம் ஒன்றே போதும், அவர்ச் சமயம் காண! என்னை?
பற்றுக பற்றற்றான்! யார் பற்றற்றவர் என்பதையும் உணர்க!!
இதனால், ”இயல்புடைய மூவர்”க் குறளுக்கு, பரிமேலழகர் உரை பொருத்தமாக இல்லை என்பது நன்கு விளங்கும்!!
இரா.பானுகுமார்,
சென்னை
Saturday, October 29, 2011
இயல்புடைய மூவர்
Labels:
இயல்புடைய மூவர்,
சமணம்,
தமிழ்ச்சமணம்,
திருக்குறள்,
ஜைனம்
Monday, October 24, 2011
திருக்குறளும் மனுதர்மமும்
குறளும் மனுவும்
இந்த வருடம், என் பிறந்தப் பரிசாக நண்பர் ஒருவர் கொடுத்த நூல் திரு.திருலோக
சீதாராம் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். திருலோக சீதாராம் மிக மென்மையாக தன் மொழிப் பெயர்ப்பை செய்திருக்கிறார் என்பது வலையுலகில் காணப்படும் மூலத்தைப்1 படிப்பவர்களுக்குப் புரியும். தற்போது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வோர் தூக்கிப் பிடிக்கும், இந்து தர்மம் சாற்றும் நூல் இதுதான். மனுதர்மத்தைப் பின்பற்றி தான் திருக்குறள் எழுந்தது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்2.
திருக்குறளில் கூறப்படும் சில கருத்துக்கள் மனுதர்மத்தில் கூறப்பட்டாலும், அவைகள்
பொதுவான கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, குறள் மனுதர்மத்தின்
தழுவல் என்று கூறமுடியாது. அப்படி கூறவேண்டுவதற்கு அடிப்படைக் கருத்துக்களில்
அவைகள் ஒன்றுப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்க்க வேண்டும். அகிம்சையே
(கொல்லாமை நெறி) குறளின் அடிநாதம். கொல்லாமையைத் தலையாய அறமாக குறள் போற்றுகிறது. மேலும், கொல்லாமையின் இயல்பான தன்மை புலால் மறுத்தல்.
அவற்றையும் குறள் ஏற்றிக் கூறுகிறது. அவற்றை மனுதர்மம் போற்றுகிறதா? என்றும் ஆராயவேண்டும். அப்படி பார்த்தோமானால், குறள் கூறும் அறமும், மனுதர்மம் கூறும்
அறமும் வேறு வேறாகயிருப்பதை யாரும் எளிதில் உள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குப் பார்ப்போம்!
”வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது பசுவதையாகாது3.”
ஆனால் குறளோ,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை4
என்றும்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று4”
என்று அழுத்தம் திருத்தமாகச் சாற்றுகிறது!!
இப்படி நிறைய முரண்பாடுகள் இருநூல்களுக்குள்ளும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
எடுத்துக் காட்டின் ஒரு நூல் அளவு விரியும் என்பதால் இன்னுமொரு அடிப்படை
முரண்ப்பாட்டை மட்டும் பார்ப்போம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
மனுதர்மத்தில்5,
”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால்
வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற
கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம்,
தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” என்று
கூறப்படுகிறது.
அஃதாவது,
பிரம்ம ஸ்வரூபியாக நின்றவரான பரம்பொருள், தலையில் இருந்து பிரம்மர்களும்
(பிராமணர்கள்), தோளில் இருந்து க்ஷத்ரியர்களும், தொடையில் இருந்து
வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்றும்,
அவர்களுடைய தொழில்கள் முறையே, வேதம் ஓதுதல், குதிரை முதற்கொண்டு
அரசாட்சி முறைமை செய்தல், வாணிபம் செய்து பொருள் ஈட்டல், மற்ற
வர்ணத்தினோருக்கு ஏவல் புரிதல் ஆகிய தொழிகளை செய்யவேண்டும் என்று
மனுதர்மம் ஆணையிடுகிறது.
மேலும், பிறப்பால் எல்லா வருணத்தினோரும் ஒரே தன்மையினரல்லர் என்பது
விளக்கமாகும்.
ஆனால் சிரமண மதத்தின் வேதமாகக்6 கருதப்படும் திருக்குறளோ,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்7
உரை - மணக்குடவர்,
”எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய்
தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது
பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும்
கூறிற்று”.
அஃதாவது,
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர்கள் செய்யும் தொழிற்திறமையால்
தான் அவர்களுக்குள் வேற்றுமைக் காணப்படும், என்று குறள் அழுத்தம்
திருத்தமாக பகற்கிறது! இதனால் மனுதர்மம் சாற்றும் தர்மம் வேறு, திருக்குறள்
காட்டும் தர்மகோட்பாடுகள் வேறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விளங்கும். என்னை?
சமண இலக்கியங்களில் இருந்து அக்குறளுக்கு சான்றுகள் காட்டுவோம்.
“அன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிகனீயே
யென்றிரண்டில்லை கண்டாயிது நினதில்லமென்றான்8”
இதன் கருத்து,
”அன்றியும் அறமும் ஒன்றே அதனால் நான் அரசன், நீ வணிகன் என்று இரண்டு
பேதமில்லை. இது உனது இல்லம் என்பதாம். இதனால் சத்திரியன், வைசியன்
என்கிற ஜாதிபேதம் பிறப்பாலில்லை என்று திருத்தக்கத்தேவர் கூறுவதைக் காண்க”
மேலும்,
மேலே சொன்ன குறளை ஒற்றி எடுத்ததுபோல மகாபுராணம்9,
“மனுஷ்யஜாதி நாமகர்மத்தினுடைய உதயத்தினால் உண்டாகிய மனிதரெல்லோரும்
ஒரேவிதமாக விருந்தபோதிலும் ஒவ்வொருவரும் தம் தம் கைக்கொண்டு
அனுஷ்டித்து வந்த தொழில்களின் பேதத்தினால் பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய,
சூத்திரரென்று நான்குவர்ணாஸ்ரமங்களாகப் பிரிந்தார்கள்”
என்றும்,
நல்ல குலமென்றுந் தீயகுலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் – தொல்சிறப்பி
னாண்பொரு ளொன்றோ தவங்கல்வியாள்வினை
யென்றிவற்றா னாருங் குலம் 10
இதன் பொருள் – நல்ல குலம் மென்றும் தீய குலம் மென்றும் என்று கூறுவதெல்லாம்
வெறும் சொல் அளவேயாகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை.
அவரவர் தவத்தினாலும், கற்ற கல்வியாலும், ஆள்வினை (முயற்சி செய்யும்
தொழில்களைக் குறிக்கும்) உடைமையாலும்தான் ஒருவருக்கும் ஆகும் குலம்.
இதனையே குறள் மேலும் விரித்து,
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக்
கருமமே (செயல், தொழில்) காரணம்.
என்றும் கூறுவதைக் காணலாம்.
இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும்,
சமுதாயமும் வேறு வேறாம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
----------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
1. http://www.vedarahasya.net/manu0.htm
2. http://www.tamilpaper.net/?p=877
3. மனுதர்மம் – 5 ஆவது அத்தியாயம், புலால் உண்ண அனுமதி அதிகாரம் – பாடல் - 39
4. திருக்குறள் – 328, 259
5. மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31
6. “எம் ஒத்து” – நீலகேசி உரையில் வாமனாசாரியார்
7. திருக்குறள் – 972
8. சீவக சிந்தாமணி – 544
9. மகாபுராணம் – 48ஆவது பர்வம் – பாடல் – 45
10. நாலடியார் – பாடல் – 195
11. திருக்குறள் - 505
இந்த வருடம், என் பிறந்தப் பரிசாக நண்பர் ஒருவர் கொடுத்த நூல் திரு.திருலோக
சீதாராம் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். திருலோக சீதாராம் மிக மென்மையாக தன் மொழிப் பெயர்ப்பை செய்திருக்கிறார் என்பது வலையுலகில் காணப்படும் மூலத்தைப்1 படிப்பவர்களுக்குப் புரியும். தற்போது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வோர் தூக்கிப் பிடிக்கும், இந்து தர்மம் சாற்றும் நூல் இதுதான். மனுதர்மத்தைப் பின்பற்றி தான் திருக்குறள் எழுந்தது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்2.
திருக்குறளில் கூறப்படும் சில கருத்துக்கள் மனுதர்மத்தில் கூறப்பட்டாலும், அவைகள்
பொதுவான கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, குறள் மனுதர்மத்தின்
தழுவல் என்று கூறமுடியாது. அப்படி கூறவேண்டுவதற்கு அடிப்படைக் கருத்துக்களில்
அவைகள் ஒன்றுப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்க்க வேண்டும். அகிம்சையே
(கொல்லாமை நெறி) குறளின் அடிநாதம். கொல்லாமையைத் தலையாய அறமாக குறள் போற்றுகிறது. மேலும், கொல்லாமையின் இயல்பான தன்மை புலால் மறுத்தல்.
அவற்றையும் குறள் ஏற்றிக் கூறுகிறது. அவற்றை மனுதர்மம் போற்றுகிறதா? என்றும் ஆராயவேண்டும். அப்படி பார்த்தோமானால், குறள் கூறும் அறமும், மனுதர்மம் கூறும்
அறமும் வேறு வேறாகயிருப்பதை யாரும் எளிதில் உள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குப் பார்ப்போம்!
”வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது பசுவதையாகாது3.”
ஆனால் குறளோ,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை4
என்றும்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று4”
என்று அழுத்தம் திருத்தமாகச் சாற்றுகிறது!!
இப்படி நிறைய முரண்பாடுகள் இருநூல்களுக்குள்ளும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
எடுத்துக் காட்டின் ஒரு நூல் அளவு விரியும் என்பதால் இன்னுமொரு அடிப்படை
முரண்ப்பாட்டை மட்டும் பார்ப்போம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
மனுதர்மத்தில்5,
”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால்
வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற
கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம்,
தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” என்று
கூறப்படுகிறது.
அஃதாவது,
பிரம்ம ஸ்வரூபியாக நின்றவரான பரம்பொருள், தலையில் இருந்து பிரம்மர்களும்
(பிராமணர்கள்), தோளில் இருந்து க்ஷத்ரியர்களும், தொடையில் இருந்து
வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்றும்,
அவர்களுடைய தொழில்கள் முறையே, வேதம் ஓதுதல், குதிரை முதற்கொண்டு
அரசாட்சி முறைமை செய்தல், வாணிபம் செய்து பொருள் ஈட்டல், மற்ற
வர்ணத்தினோருக்கு ஏவல் புரிதல் ஆகிய தொழிகளை செய்யவேண்டும் என்று
மனுதர்மம் ஆணையிடுகிறது.
மேலும், பிறப்பால் எல்லா வருணத்தினோரும் ஒரே தன்மையினரல்லர் என்பது
விளக்கமாகும்.
ஆனால் சிரமண மதத்தின் வேதமாகக்6 கருதப்படும் திருக்குறளோ,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்7
உரை - மணக்குடவர்,
”எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய்
தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது
பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும்
கூறிற்று”.
அஃதாவது,
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர்கள் செய்யும் தொழிற்திறமையால்
தான் அவர்களுக்குள் வேற்றுமைக் காணப்படும், என்று குறள் அழுத்தம்
திருத்தமாக பகற்கிறது! இதனால் மனுதர்மம் சாற்றும் தர்மம் வேறு, திருக்குறள்
காட்டும் தர்மகோட்பாடுகள் வேறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விளங்கும். என்னை?
சமண இலக்கியங்களில் இருந்து அக்குறளுக்கு சான்றுகள் காட்டுவோம்.
“அன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிகனீயே
யென்றிரண்டில்லை கண்டாயிது நினதில்லமென்றான்8”
இதன் கருத்து,
”அன்றியும் அறமும் ஒன்றே அதனால் நான் அரசன், நீ வணிகன் என்று இரண்டு
பேதமில்லை. இது உனது இல்லம் என்பதாம். இதனால் சத்திரியன், வைசியன்
என்கிற ஜாதிபேதம் பிறப்பாலில்லை என்று திருத்தக்கத்தேவர் கூறுவதைக் காண்க”
மேலும்,
மேலே சொன்ன குறளை ஒற்றி எடுத்ததுபோல மகாபுராணம்9,
“மனுஷ்யஜாதி நாமகர்மத்தினுடைய உதயத்தினால் உண்டாகிய மனிதரெல்லோரும்
ஒரேவிதமாக விருந்தபோதிலும் ஒவ்வொருவரும் தம் தம் கைக்கொண்டு
அனுஷ்டித்து வந்த தொழில்களின் பேதத்தினால் பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய,
சூத்திரரென்று நான்குவர்ணாஸ்ரமங்களாகப் பிரிந்தார்கள்”
என்றும்,
நல்ல குலமென்றுந் தீயகுலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் – தொல்சிறப்பி
னாண்பொரு ளொன்றோ தவங்கல்வியாள்வினை
யென்றிவற்றா னாருங் குலம் 10
இதன் பொருள் – நல்ல குலம் மென்றும் தீய குலம் மென்றும் என்று கூறுவதெல்லாம்
வெறும் சொல் அளவேயாகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை.
அவரவர் தவத்தினாலும், கற்ற கல்வியாலும், ஆள்வினை (முயற்சி செய்யும்
தொழில்களைக் குறிக்கும்) உடைமையாலும்தான் ஒருவருக்கும் ஆகும் குலம்.
இதனையே குறள் மேலும் விரித்து,
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக்
கருமமே (செயல், தொழில்) காரணம்.
என்றும் கூறுவதைக் காணலாம்.
இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும்,
சமுதாயமும் வேறு வேறாம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
----------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
1. http://www.vedarahasya.net/manu0.htm
2. http://www.tamilpaper.net/?p=877
3. மனுதர்மம் – 5 ஆவது அத்தியாயம், புலால் உண்ண அனுமதி அதிகாரம் – பாடல் - 39
4. திருக்குறள் – 328, 259
5. மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31
6. “எம் ஒத்து” – நீலகேசி உரையில் வாமனாசாரியார்
7. திருக்குறள் – 972
8. சீவக சிந்தாமணி – 544
9. மகாபுராணம் – 48ஆவது பர்வம் – பாடல் – 45
10. நாலடியார் – பாடல் – 195
11. திருக்குறள் - 505
Labels:
சமணம்,
தமிழ்ச்சமணம்,
திருக்குறள்,
மனுதர்மம்,
ஜைனம்
Wednesday, October 19, 2011
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
நடுவின்றி நன்பொருள் வெஃகின்
சமண சமயத்திற்கு நல்லறம்1என்றே பெயர். நல்லறம் இரண்டு வகைப்படும்2.
அவை முறையே இல்லறம், துறவறம் எனப்படும். இல்லறம் வடமொழியில்
சிராவகம் என்றும் பாகதத்தில் சாவகம்3 என்றும் அழைக்கப்படுகிறது.இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை அணுவிரதம் என்றும் துறவறத்தார்
கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை மகாவிரதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அணுவிரதங்கள்4 ஐந்து. அவைகள்,
அணுவிரதம்
1.அகிம்சை (கொல்லாமை)
2.சத்தியம் (பொய்யாமை)
3.அஸ்தேயம் (திருடாமை)
4.பிரம்மசர்யம் (பிறன்மனை நயவாமை)
5.பரிமித பரிக்கிரகம் (நன்பொருள் வெஃகாமை)
சமண இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஐந்து ஒழுக்கங்களின்
கடைசியாகக் கூறப்படுவதுதான் மிகுபொருள் விரும்பாமை5 என்னும்
விரதமாம். அவற்றை ஈண்டு பார்போம்.
மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தில் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதத்தைப்
பற்பல சொற்களில் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். நன்பொருள் வெஃகாமை,
பொருள் வரைதல், மிகுபொருள் உவாவாமை போன்றவைகள் அவற்றுள் சில.
மிகுபொருள் விரும்பாமை ஓர் அறமாக, இல்லறத்தார் ஒழுக்கமாக வலியுறுத்தியச்
சமயம் சமணம் தான். சமூகத்தில் ஒருசாராரிடம் மட்டுமே பொருள் சேர்ந்தால்,
சமூகம் சீர்க்குலையும் என்பதனை என்றோ உணர்ந்து ஓர் அறமாக கொள்ளப்பட்டது
மிக சிறப்புடைத்தாம். மிகுதியான பொருள் உடையவர்கள் மற்றவர்களுக்கு
அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த அறம்/ஒழுக்கம் கூறப்பட்டிருக்குமோ
என்று எண்ணத் தோன்றுகிறது6.
ஏனெனில், சமணம் இல்லறத்தாருக்கு நான்கு வகை தானங்களை கடைப்பிடிக்கச்
சொல்கிறது. அவை,
1. அன்னதானம்
2. அடைக்கல தானம்
3. மருத்துவ தானம்
4. கல்வி தானம்
என்பனவாம். இந்த தானங்கள்7, துறவறத்தாரின் தவத்திற்கு இணையாகவும்
சொல்லப்படுகிறது என்பது ஈங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும் பொருள் படைத்தவர்கள்,
இந்த தானங்களை கொண்டு ஏழைகளுக்கும், இரந்தார்களுக்கும், அனாதைகளுக்கும்
உதவவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
திருக்குறளில் மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் இந்த
விரதம் (மிகுபொருள் விரும்பாமை) சொல்லப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்ப்போம்.
வெஃகாமை8 என்னும் அதிகாரத்தில் மிகுபொருள் விரும்பாமை குறிப்பிடப்பட்டிருக்கிறது!
அக்குறள்,
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள் (171)
இக்குறளுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுகிறார்,
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன்
அன்று ‘என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை’ ஒருவன்
வெஃகுமாயின்; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல்
அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே
அவனுக்குக் கொடுக்கும்.
குடியை வளரச் செய்து பல நன்மையும் பயக்கும் இயல்பு பற்றி, வெஃகின்
என்பார், ‘நன்பொருள் வெஃகின்’ என்றார். பொன்ற என்பது ‘பொன்றி’
எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.
என்றும்,
மணக்குடவர் அதே குறளுக்கு,
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே
குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்
இது சந்தான நாச முண்டாமென்றது.
என்றும் பொருள் செய்திருக்கிறார்.
இங்கே “நன்பொருள்” என்பதுதான் அந்தக் குறளின் குறிச் சொற்றொடர்.
நன்பொருள் என்பதற்கு பெரிய/பெரும் பொருள் என்றும் பொருள்படும்.
எப்படியெனின், நன்றாக மழைப் பொழிந்தது என்றால் பலத்த/பெரும்
மழைப் பெய்தது என்று பொருள் கொள்கிறோம். இன்னுமொரு காட்டுப்
பார்ப்போம். அவன் நன்றாக அடித்துவிட்டான் என்றால் கடுமையாக/பெரிதாக
அடித்துவிட்டான் என்றுப் பொருள் படுவதுபோல், நன்பொருள் என்பதற்கு
மணக்குடவர் கூறுவதுபோல் ”மிக்க பொருள்” என்றுப் பொருள் கொண்டால்
அக்குறள் முழுமைப் பெறும். மேலும் தொல்காப்பியம் “நன்று பெரிதாகும்9”
என்று கூறுவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்,
பரிமேலழகர் உரை இங்கு சிறப்பில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.
சமூகத்தில் ஒருசாரார் பேராசையால் பெரும் பணம் சேர்த்துக் கொண்டே போனால்,
நாட்டில் சமூக வாழ்வு நடுவு நிலைமையின்றிக் குன்றிப்போகும், திருட்டு
முதலான குற்றங்கள் பெருகும், ஏழை, எளியோர் இன்னல் கொள்வர்,
வறுமைத் தலைவிரித்தாடும் என்பதால், சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க
சமணம் இல்லறத்தாருக்கு “பொருள் வரைதல்10” என்ற விரதத்தை/ஒழுக்கத்தை
வலியுறுத்துகின்றது.
இரா.பானுகுமார்,
சென்னை
=====================================================
அடிக்குறிப்பு:
1. தொல்அறமே படையாய் உடை அச்சுத நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே – திருநூற்றந்தாதி (36)
2. இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)
3. சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் – சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை(20)
4. அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம் = அருங்கலச் செப்பு (65)
5. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார் பொய்
உரையார் களவினை ஒழுகார் பிறர்மனை
உவவார் மிகுபொருள் உவவார் வெம்
கரையால் உணர்வினை அழியார் அழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவுனை நுகரார் இரவுணல்
புகழார் குரவரை இகழாரே – திருக்கலம்பகம் (67)
6. செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு – அறநெறிச்சாரம் (178)
7. “பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)
8. வெஃகாமை என்பதற்கு பரிமேலழகர் பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதாமை என்றும் மணக்குடவர் பிறர் பொருளை விரும்பாமை என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது பொருத்தமாகயில்லை. பிறர்ப் பொருள் விரும்பாமை என்பதைக் குறிக்க “கள்ளாமை” என்ற தனி அதிகாரம் சொல்லப்பட்டிருக்கும்போது வெஃகாமை என்பதற்கும் பிறர் பொருள் விரும்பாமை என்று பொருள் கொள்வது சிறந்ததாகப்படவில்லை. வெஃகாமை என்பதற்கு பொருள் வரைதல் அஃதாவது மிகுபொருள் வரைதல் என்ற கருத்தில் எடுத்தாண்டால் பொருள் சிறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
9. "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
10. பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச் செப்பு (66)
சமண சமயத்திற்கு நல்லறம்1என்றே பெயர். நல்லறம் இரண்டு வகைப்படும்2.
அவை முறையே இல்லறம், துறவறம் எனப்படும். இல்லறம் வடமொழியில்
சிராவகம் என்றும் பாகதத்தில் சாவகம்3 என்றும் அழைக்கப்படுகிறது.இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை அணுவிரதம் என்றும் துறவறத்தார்
கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை மகாவிரதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அணுவிரதங்கள்4 ஐந்து. அவைகள்,
அணுவிரதம்
1.அகிம்சை (கொல்லாமை)
2.சத்தியம் (பொய்யாமை)
3.அஸ்தேயம் (திருடாமை)
4.பிரம்மசர்யம் (பிறன்மனை நயவாமை)
5.பரிமித பரிக்கிரகம் (நன்பொருள் வெஃகாமை)
சமண இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஐந்து ஒழுக்கங்களின்
கடைசியாகக் கூறப்படுவதுதான் மிகுபொருள் விரும்பாமை5 என்னும்
விரதமாம். அவற்றை ஈண்டு பார்போம்.
மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தில் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதத்தைப்
பற்பல சொற்களில் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். நன்பொருள் வெஃகாமை,
பொருள் வரைதல், மிகுபொருள் உவாவாமை போன்றவைகள் அவற்றுள் சில.
மிகுபொருள் விரும்பாமை ஓர் அறமாக, இல்லறத்தார் ஒழுக்கமாக வலியுறுத்தியச்
சமயம் சமணம் தான். சமூகத்தில் ஒருசாராரிடம் மட்டுமே பொருள் சேர்ந்தால்,
சமூகம் சீர்க்குலையும் என்பதனை என்றோ உணர்ந்து ஓர் அறமாக கொள்ளப்பட்டது
மிக சிறப்புடைத்தாம். மிகுதியான பொருள் உடையவர்கள் மற்றவர்களுக்கு
அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த அறம்/ஒழுக்கம் கூறப்பட்டிருக்குமோ
என்று எண்ணத் தோன்றுகிறது6.
ஏனெனில், சமணம் இல்லறத்தாருக்கு நான்கு வகை தானங்களை கடைப்பிடிக்கச்
சொல்கிறது. அவை,
1. அன்னதானம்
2. அடைக்கல தானம்
3. மருத்துவ தானம்
4. கல்வி தானம்
என்பனவாம். இந்த தானங்கள்7, துறவறத்தாரின் தவத்திற்கு இணையாகவும்
சொல்லப்படுகிறது என்பது ஈங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும் பொருள் படைத்தவர்கள்,
இந்த தானங்களை கொண்டு ஏழைகளுக்கும், இரந்தார்களுக்கும், அனாதைகளுக்கும்
உதவவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
திருக்குறளில் மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் இந்த
விரதம் (மிகுபொருள் விரும்பாமை) சொல்லப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்ப்போம்.
வெஃகாமை8 என்னும் அதிகாரத்தில் மிகுபொருள் விரும்பாமை குறிப்பிடப்பட்டிருக்கிறது!
அக்குறள்,
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள் (171)
இக்குறளுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுகிறார்,
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன்
அன்று ‘என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை’ ஒருவன்
வெஃகுமாயின்; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல்
அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே
அவனுக்குக் கொடுக்கும்.
குடியை வளரச் செய்து பல நன்மையும் பயக்கும் இயல்பு பற்றி, வெஃகின்
என்பார், ‘நன்பொருள் வெஃகின்’ என்றார். பொன்ற என்பது ‘பொன்றி’
எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.
என்றும்,
மணக்குடவர் அதே குறளுக்கு,
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே
குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்
இது சந்தான நாச முண்டாமென்றது.
என்றும் பொருள் செய்திருக்கிறார்.
இங்கே “நன்பொருள்” என்பதுதான் அந்தக் குறளின் குறிச் சொற்றொடர்.
நன்பொருள் என்பதற்கு பெரிய/பெரும் பொருள் என்றும் பொருள்படும்.
எப்படியெனின், நன்றாக மழைப் பொழிந்தது என்றால் பலத்த/பெரும்
மழைப் பெய்தது என்று பொருள் கொள்கிறோம். இன்னுமொரு காட்டுப்
பார்ப்போம். அவன் நன்றாக அடித்துவிட்டான் என்றால் கடுமையாக/பெரிதாக
அடித்துவிட்டான் என்றுப் பொருள் படுவதுபோல், நன்பொருள் என்பதற்கு
மணக்குடவர் கூறுவதுபோல் ”மிக்க பொருள்” என்றுப் பொருள் கொண்டால்
அக்குறள் முழுமைப் பெறும். மேலும் தொல்காப்பியம் “நன்று பெரிதாகும்9”
என்று கூறுவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்,
பரிமேலழகர் உரை இங்கு சிறப்பில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.
சமூகத்தில் ஒருசாரார் பேராசையால் பெரும் பணம் சேர்த்துக் கொண்டே போனால்,
நாட்டில் சமூக வாழ்வு நடுவு நிலைமையின்றிக் குன்றிப்போகும், திருட்டு
முதலான குற்றங்கள் பெருகும், ஏழை, எளியோர் இன்னல் கொள்வர்,
வறுமைத் தலைவிரித்தாடும் என்பதால், சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க
சமணம் இல்லறத்தாருக்கு “பொருள் வரைதல்10” என்ற விரதத்தை/ஒழுக்கத்தை
வலியுறுத்துகின்றது.
இரா.பானுகுமார்,
சென்னை
=====================================================
அடிக்குறிப்பு:
1. தொல்அறமே படையாய் உடை அச்சுத நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே – திருநூற்றந்தாதி (36)
2. இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)
3. சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் – சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை(20)
4. அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம் = அருங்கலச் செப்பு (65)
5. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார் பொய்
உரையார் களவினை ஒழுகார் பிறர்மனை
உவவார் மிகுபொருள் உவவார் வெம்
கரையால் உணர்வினை அழியார் அழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவுனை நுகரார் இரவுணல்
புகழார் குரவரை இகழாரே – திருக்கலம்பகம் (67)
6. செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு – அறநெறிச்சாரம் (178)
7. “பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)
8. வெஃகாமை என்பதற்கு பரிமேலழகர் பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதாமை என்றும் மணக்குடவர் பிறர் பொருளை விரும்பாமை என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது பொருத்தமாகயில்லை. பிறர்ப் பொருள் விரும்பாமை என்பதைக் குறிக்க “கள்ளாமை” என்ற தனி அதிகாரம் சொல்லப்பட்டிருக்கும்போது வெஃகாமை என்பதற்கும் பிறர் பொருள் விரும்பாமை என்று பொருள் கொள்வது சிறந்ததாகப்படவில்லை. வெஃகாமை என்பதற்கு பொருள் வரைதல் அஃதாவது மிகுபொருள் வரைதல் என்ற கருத்தில் எடுத்தாண்டால் பொருள் சிறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
9. "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
10. பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச் செப்பு (66)
Labels:
சமணம்,
திருக்குறள்,
வெஃகாமை,
ஜைனம்
Subscribe to:
Posts (Atom)